அண்ணா பல்கலைக்கழக தேர்வு விதிமுறைகள் – திருத்தம் செய்ய சிண்டிகேட் குழு அனுமதி!

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2017-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய தேர்வு விதிமுறைகளுக்கு எதிராக மாணவர்கள் புகார் தெரிவித்ததையடுத்து, அண்ணா பல்கலைக்கழக கல்விக் குழு புதிய விதிமுறைகளில் திருத்தம் செய்ய முடிவு செய்தது. இந்நிலையில், நேற்று மாலை கூடிய அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு, 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட விதிமுறைகளில் திருத்தம் செய்ய அனுமதி வழங்கியது. இதன்மூலம், பொறியியல் மாணவர்கள் தோல்வியடைந்த பாடங்களை அடுத்தடுத்த செமஸ்டர்களிலேயே எழுதித் தேர்ச்சி பெறலாம்.