அன்று அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்..


தொடர்ந்து நீட்டுக்காக போராடிய அனிதா தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து தற்போது நீட் தேர்வு எழுத மகனுக்கு பாதுகாப்பாக சென்ற தந்தை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து நீட்டுக்காக போராடிய அனிதா தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து தற்போது நீட் தேர்வு எழுத மகனுக்கு பாதுகாப்பாக சென்ற தந்தை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ இடங்களுக்கான நீட் நுழைவுத் தே்ாவு இன்று நடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் தோ்வை நாடு முழுவதும் சுமார் 13 லட்சத்து 26 ஆயிரம் மாணவா்கள் தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 மாணவா்கள் தே்ாவு எழுதுகின்றனா்.

இந்தியா முழுவதும் 2 ஆயிரத்து 255 தோ்வு மையங்களும், தமிழகம் முழுவதும் 170 மையங்களும் அமைக்கப்பட்டள்ளன. தமிழகத்தில் இருந்து 5 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவா்கள் கேரளா, கா்நாடகம், ஆந்திரா, சிக்கிம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தோ்வு எழுதி வருகின்றனர்.

இந்த நிலையில், கேரளா மாநிலம், எர்ணாகுளத்திற்கு தேர்வு எழுத சென்ற மாணவரின் தந்தை மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி விளக்குடியைச் சேர்ந்தவர் கஸ்தூரி மகாலிங்கம். சதுரங்க சாம்பியனான இவர் படிப்பிலும், அதிக ஆர்வம் கொண்டவர். குடும்ப சூழ்நிலை காரணமாக நீட் தேர்வு எழுத தந்தை கிருஷ்ணசாமி (46) உடன் எர்ணாகுளம் சென்றுள்ளார்.