அயோத்தி வழக்கு விசாரணையை அக்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் திட்டம்..

சர்ச்சைக்குரிய அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற அமர்வில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வரும் அக்டோபர்-18-ந்தேதிக்குள் வழக்கின் வாதங்கள் அனைத்தையும் நிறைவு செய்யுமாறு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 18-ந்தேதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.

நவம்பர் முதல் வாரத்தில் தீர்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.