இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 106 பேர் கைது..

இலங்கை தற்கொலை தாக்குதல் தொடர்பாக 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் தினத்தன்று அந்நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தாக்குதல் தொடர்பாக 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை கூறியுள்ளது.

குண்டு வெடிப்பில் தொடர்புடைய மேலும் பலரை தேடி வருவதாகவும், குண்டு வெடிப்பிற்கு உதவி பலர் பதுங்கி இருக்கும் இடங்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

குண்டு வெடிப்பிற்கு பின்னணியில் உள்ளவர்களை மொத்தமாக பிடிக்க தேடுதல் வேட்டை தீவிரபடுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.