உத்திரகண்ட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.0ஆக பதிவு..


உத்திரகண்ட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது தலைநகர் டில்லியிலும் உணரப்பட்டது. பீதியில் உறைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

உத்திரகண்ட் மாநிலம் டெகராடூனில் இருந்து 121 கி.மீ தொலையில் மையம் கொண்டு நடுநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சமோலி, ஹரித்துவார், அல்மோரா, பகேஸ்வர், ருத்ரபிரயாக், ராம்நகர் ஆகிய இடங்களில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

டெல்லியில் நில அதிர்வு

ரிக்டர் அளவில் 5.0ஆக பதிவான இந்நிலநடுக்கம் தலைநகர் டில்லியிலும் உணரப்பட்டது. இதனையடுத்து பீதியில் உறைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.