காமன்வெல்த் போட்டி : தங்கம் வென்ற சதீஷ் சிவலிங்கத்திற்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை அறிவிப்பு


காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கத்திற்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை அறிவித்துள்ளார். காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ எடைப்பிரிவில் பளுதூக்குதலில் சதீஷ் தங்கம் வென்றார். தங்கப்பதக்கம் வென்று தமிழகத்தை பெருமை அடைய செய்தமைக்குக்கும், காமன்வெல்த் போட்டியில் தொடர்ந்து பதக்கம் வென்றதற்கும் முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.