காவிரியில் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உடனே உத்தரவிட வேண்டும் : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்


காவிரியில் 4 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உடனே உத்தரவிட வேண்டும் எனவும், அணையில் தண்ணீர் இல்லை என்று கர்நாடக அரசு கூறுவதை ஏற்க கூடாது எனவும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தமிழகத்துக்கு ஏற்கனவே நீர் தந்துவிட்டதாக கர்நாடக அரசு கூறுவது உண்மை இல்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.