கோவை துடியலூர் சிறுமி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் அம்பலம்…

கோவை துடியலூரில் சடலமாக மீட்கப்பட்ட 6 வயது சிறுமி, தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, பிரேத பரிசோதனையின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

துடியலூர் அடுத்த பன்னிமடையை சேர்ந்த 6 வயது சிறுமி, இரு தினங்களுக்கு முன்பு உடலில் காயங்களுடன் வீட்டிற்கு அருகே சடலமாக கிடந்தார்.

பின்னர் சிறுமியின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பாக 2 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமியின் வாயை துணியால் அழுத்தி, ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கூட்டு பாலியல் செய்ததற்கான தடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.