சமைக்க தெரியுமா? என பிரியங்கா காந்தியிடம் கேள்வி..

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியிடம் சமைக்கத் தெரியுமா? என மாணவர்கள் கேட்ட கேள்விக்கு ருசிகரமாக அவர் பதிலளித்தார்.

உத்தரப்பிரதேசம் மாநிலம் பைசாபாத்தில் உள்ள சன்பீம் என்ற பள்ளியில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

அப்போது, சமைக்கத் தெரியுமா? என பிரியங்கா காந்தியிடம் மாணவர்கள் கேள்வி கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அவர், தான் ஒரு சிறந்த சமையலர் என்றும், 15 வயது முதல் சமைத்து வருவதாகவும் கூறினார்.

இத்தாலி மற்றும் தாய்லாந்து நாட்டு உணவு வகைகளை சமைப்பதென்றால் மிகவும் பிடிக்கும் என்றும் பதில் அளித்தார்.