சூலூர் எஸ்பிஐ வங்கி கிளையின் தீ விபத்து..


கோவை மாவட்டம் சூலூரில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையின் சர்வர் அறையில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதில் கம்ப்யூட்டர், ஏசி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலாகி உள்ளன. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்துள்ளனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.