சென்னையில் நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு..

கரோனா தடுப்பு பணியில் இருக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊதியம் வழங்காவிட்டால் கிரிமினல் குற்ற தண்டனை உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கின்போது கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு, காவல்துறைக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்து வகையில், சென்னையிலும், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் சில பகுதிகளிலும் நாளை நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது.

இதையடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு, தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்..
அதில், நோய் தடுப்பு பகுதிகளில் பொதுமக்களின் நடமாட்டத்தை முற்றிலும் குறைக்கும் வகையில், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், முழு ஊரடங்கை தீவிரமாக செயல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.