
சென்னை கோயம்பேடு மேம்பாலத்தின் இறுதிக்கட்ட பணிகள் அக்டோபர் 31க்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். மேலும் வேளச்சேரி மேம்பால 2ம் அடுக்கு பணிகள் முடிக்கப்பட்டு இம்மாத இறுதியில் பயன்பாட்டுக்கு வரும் என்று எ.வ.வேலு கூறியுள்ளார்.
பணிகள் எதையும் செய்யாமல் கடந்த 3 ஆண்டுகளாக காலத்தை வீணாக கடத்தியது அதிமுக அரசுதான் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் அவர் வேளந்சேரி பாலம்,மேடவாக்கம் பாலம் இரண்டும் இம்மாத இறுதிக்குள் முடிக்க வலியுறுத்தியதாக தெரிவித்தார்.