ஜெயேந்திரர் மறைவுக்கு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இரங்கல்…


காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் மறைவுக்கு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜெயேந்திரரின் மறைவு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ஜெயேந்திரரின் மறைவுக்கு ழமாக வருந்துகிறேன். லட்சக்கணக்கானவர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஜெயேந்திரரின் இறப்பு மூலம் நாம் தற்போது ஒரு பெரிய துறவியை இழந்துவிட்டோம். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.