தனது அரசியல் வாழ்வில் முக்கிய அறிவிப்பை வரும் 28-ந்தேதி வெளியிடுவேன் : டி.ராஜேந்தர்..

தனது அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவைக் கொண்டாடிய டி.ராஜேந்தர், வரும் 28-ம் தேதி தனது அரசியல் வாழ்வில் முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ‘சத்ரியனாகப் பார்த்த நீங்கள் இனி சாணக்கியனாகப் பார்க்கப்போகிறீர்கள். சினிமாவைவிட சவாலானது என்பதால் சிம்புவை அரசியலில் விட விரும்பவில்லை’ என்றார்.