தமிழகத்தில் மேலும் 3,965 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் மேலும் 3,965 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 34-ஆயிரத்தை கடந்தது. .

இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,34,226 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் மேலும் 69 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 1,898-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1185 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 76158-ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 3,591 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85,915-ஆக அதிகரித்துள்ளது.