துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு..

துாத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடி வந்தனர். இந்த போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது.

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது வழக்கின் தீர்ப்பை அளித்த பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்துடன் 3 வாரத்திற்குள் ஆலையை திறக்க உதவுமாறு உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.