தேவர் சிலைக்கான தங்கக்கவசத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க பாங்க் ஆஃப் இந்தியா முடிவு

அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட பசும் பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கான தங்க கவசம் மதுரை பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. தேவர் பிறந்த நாளை முன்னிட்டு அதை வெளியில் எடுக்க வந்த துணைமுதல்வர் ஓபிஎஸ் மற்றும் தினகரன் ஆதரவாளர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி தங்க கவசத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது.