தொடர் மழை: திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..


வடகிழக்கு பருவ மழை கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் தொடர் மழையாக பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், நாகை, திருவாரூர், விழுப்புரம், கடலுார்,திருவண்ணாமலை, காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.