நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 63,490 பேருக்கு புதியதாக கரோனா தொற்று…

நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது இன்று 25,89,682 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 63,490 நபர்கள் புதியதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதேபோல 944 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 49,980 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது 6,77,444 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 18,62,258 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதமானது 71.91 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 2,93,09,703 பேரின் மாதிரிகள் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 7,46,608 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.