நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை மறுநாள் தூக்கு..

நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 20-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அவர்களை தூக்கிலிடும் பணியில் ஈடுபட 3 நாள்களில் தயாராக மீரட் சிறை ஊழியருக்கு திகார் சிறை நிர்வாகம் கடந்த 16-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.

அதன்படி டெல்லி திகார் சிறையில் இன்று காலை அதற்கான ஒத்திகை நடத்தப்பட்டதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி குற்றவாளி பவன்குமார் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.


இதே போல் மற்றொரு குற்றவாளியான அக்க்ஷய் குமார் 2-வது முறையாக குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்.