நீட் தேர்வு வயது உச்சவரம்பிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை


நீட் தேர்வு எழுதுவோருக்கு வயது உச்சவரம்புக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடக்கால தடை விதித்துள்ளது. மே 6ம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுப்பிரிவில் 25 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதிமுறைக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.