நேபாளத்தில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு..


நேபாள தலைநகர் காத்மாண்டுவின் பிராட் நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் அருகே சக்தி குறைந்த குண்டுவெடித்தது. காம்பவுண்ட் சுவர் மட்டும் சேதமடைந்தது. இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை. டூவிலரில் வந்த இருவர் இந்த குண்டு வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.