நேபாளத்தில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவு..


நேபாளத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவாகியுள்ளது. சேத விபரங்கள் முழுமையாக தெரியவில்லை.

நேப்பாளத்தில் இன்று மிதமாக நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5.0 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், காலை 8.20 மணிக்கு ஏற்பட்டது. கடந்த 2015 -ம் ஆண்டு ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் குறித்த அச்சம் இன்னும் விலகாத நிலையில் இன்றைய நிலநடுக்கம் மக்கள் மனத்தில் அச்சத்தை அதிகரித்துள்ளது.