பாக்., சிறையில் குல்பூஷண் ஜாதவை குடும்பத்தார் சந்திப்பு..

பாகிஸ்தான் சிறையில் தூக்குத் தண்டனைக் கைதியாக உள்ள குல்பூஷண் ஜாதவை அவரது குடும்பத்தார் இன்று சிறையில் சந்தித்துப் பேசினர். இதுதொடர்பான வீடியோவை பாகிஸ்தான் விரைவில் வெளியிடும் என அறிவித்துள்ளது.

இந்தியா சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டதை அடுத்து குல்பூஷண் ஜாதவின் தூக்குத்தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.