பிரபஞ்சன் பேசு பொருளானார்: கனவுதாசன்

 

 

 

 

 

 

 

காலங் கடந்தவர்

காலம் ஆனார்.

வானம் வசப்பட்டவர்

மரண வசப்பட்டார்.

எழுத்து வசப்பட்டவர்

இயற்கை வசப்பட்டார்.

வாழ்வின் அர்த்த பாவங்களில்

போதாமைகளில்

எழுத்தைக் கடத்தியவர்

கடந்து போனார்!

எழுத்தை ஏணியாக்கி

உயரம் தொட்டார்.

உயரம், வாசகப்பரப்பில்

கண்டு கொள்ளப்பட்டது.

வரலாற்றை

வாசகர்கள் தீர்மானிக்கிறார்கள்.

பிரபஞ்சனுக்கு

உள்ளுக்குள் ஏதும்

பஞ்சம் இருக்கலாம்.

பிற பஞ்சம், புற பஞ்சம்

ஏதுமில்லை.

உடல் பிறந்த நோய் மட்டுமே

வில்லனாய் வந்தது.

மரணம், கண்ணீரை மட்டுமல்ல

மரியாதையையும் பெறுகிறது.