பிளஸ் 2 முடித்தவர்களா நீங்கள்.. : தமிழக அரசில் கால்நடை ஆய்வாளர் வேலை பணி..

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புயில் காலியாக 583 கால்நடை ஆய்வாளர் நிலை-II பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: கால்நடை ஆய்வாளர் நிலை-II

காலியிடங்கள்: 583

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். 11 மாத கால்நடை ஆய்வாளர் பயிற்சி முடித்த பின் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு கால்நடை ஆய்வாளர் நிலை-2 ஆக பணி நியமனம் வழங்கப்படும். பயிற்சி காலத்தில் சம்பளம், உதவித்தொகை வழங்கப்பட மாட்டாது.

வயதுவரம்பு: பொது பிரிவினர் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் 46 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்: ரூ.100, இதனை The Director, Animal Husbandry and Veterinary services, Chennai-35 என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள், விதவைகள், திருநங்கைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் , எண் 571, அண்ணாசாலை, நந்தனம். சென்னை – 35 என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் மூலமோ கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய
https://cms.tn.gov.in/sites/default/files/announcement/LI_notification_021219_0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2019