15-வது மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்புகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பிரதமர், மத்திய நிதி அமைச்சர் மற்றும் 10 மாநில முதல்வர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாநிலங்களுக்கு மத்திய அரசு வருவாயில் இருந்து நியாமான நிதி பகிர்வுக்கு வழியில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 1971 மக்கள் தொகை அடிப்படையிலேயே நிதி பகிர்வு இருக்க வேண்டும் என்றார். ஒப்புகொண்டதற்கு மாறாக மத்திய நிதி ஆணைய ஆய்வு வரம்பு தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
