மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்பு : மீனவர்களுக்கு எச்சரிக்கை..


இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மன்னார் வளைகுடா கடல்பிராந்தியத்தில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு மணிக்கு 45கி.மி முதல் 55கி.மி வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் 10 மற்றும் 11 -ம் தேதிகளில் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச்செல்லக்கூடாது என மீன் வளத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.