வடகிழக்கு பருவமழை 2 நாளில் தொடங்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல், ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .