ஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடியாது : பேரவையில் முதல்வர் பேச்சு..


இனிமேல் யார் நினைத்தாலும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலைக்கு கொடுக்கப்பட்ட அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட்டு நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது என பேரவையில் ஸ்டாலின் கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.