ஸ்டெர்லைட் போராட்டம் : இரவோடு இரவாக வீடு புகுந்து சிறுவர்களை தாக்கிய போலீஸார்..


ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்ட நிலையில், இரவில் இளைஞர்கள்,சிறுவர்கள் என பாராமல் வீடுபுகுந்து போலீஸார் அடித்துள்ளனர்.

ஸ்டெர்லை போராட்டத்தின் 100 வது நாளின் போது ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தார் அம்மாவட்ட ஆட்சியர்.

இருப்பினும் அதைப்பொருட்படுத்தாமல் மக்கள் பேரணியாக சென்றனர். இதையடுத்து அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதோடு, அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.

இணைய சேவை துண்டிப்பு;
இந்நிலையில் போராட்டம் குறித்தும், உயிரிழந்தவர்கள் குறித்தும் தவறான தகவல் பரப்பப்படுவதால், பதற்றம் அதிகரிக்கிறது என கூறி தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. நிலைமை சீராகும் வரை இது தொடரும் என கூறப்பட்டுள்ளது