10 சதவிகித இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனு : மத்தியஅரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

உயர் சாதி வகுப்பினர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது.

அந்த சட்டம் மக்களவை,மாநிலங்களவையில் நிறைவேறி குடியரசுத் தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டது.

இந்த இடஒதுக்கீட்டிற்கு எதிராக திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் 2 வாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டது.