100 நாள் வேலை திட்டத்திற்கு மே 3-ம் தேதி முதல் அனுமதி : தமிழக அரசு அரசாணை..

100 நாள் வேலை மே 3-ம் தேதிக்கு பிறகு  100 நாள் வேலை திட்டத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் தனி மனித இடைவெளியுடன் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள் 33% ஊழியர்களுடன் மே 3-ம் தேதிக்கு பிறகு இயங்கலாம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நீர்ப்பாசனம், அணைகள், சாலைகள், செங்கல் சூளை, குடிநீர் வினியோகம், தூய்மை பணிகள், மின்சார பணிகள் ஆகியவற்றை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் அனுமதி கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு பொருந்தாது எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.