10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களா..: நபார்டு வங்கியில் வேலை …

நபார்டு வங்கி என அழைக்கப்படும் தேசிய வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கியில் காலியாக உள்ள 73 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 73

பணி: Office Attendant

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.12.2019 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 10,940 – 23,700

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு, ஆன்லைன் முதன்மைத் தேர்வு மற்றும் மொழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் ரூ.400, அறிவிப்பு கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ. 450 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.nabard.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.