10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!..

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. சமச்சீர் பாடத்திட்டத்தில் மார்ச் 14 முதல் 29ந் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றன.

மாநிலம் முழுவதும் 9 லட்சத்து 97 ஆயிரம் மாணவ- மாணவியர் இந்த தேர்வை எழுதியிருந்தனர். இன்று காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது

மின்னஞ்சல் மூலமாகவும், SMS மூலமாகவும் மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். வருகிற 2ந் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம் என்றும், மே 6 முதல் பள்ளி மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.