10-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு…

10ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய மதிப்பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெறுவதை எளிமையாக்கும் வகையில், புதிய மதிப்பெண் திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது பொதுத்தேர்வில் 33% மதிப்பெண், செயல்முறை தேர்வில் 33% மதிப்பெண் பெறுவது கட்டாயமாக உள்ளது.

புதிய திட்டத்தில் எழுத்துத்தேர்வு, செயல்முறைதேர்வு இரண்டிலும் சேர்த்து 33% மதிப்பெண் பெற்றால் போதும் என்று மாற்ற திட்டமிட்டுள்ளனர்.