11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்திலும், தேர்வு நடைமுறையிலும் எந்த மாற்றமுமில்லை

11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்திலும், தேர்வு நடைமுறையிலும் எந்த மாற்றமுமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த ஆண்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு 5 பாடங்களாக குறைக்கப்பட உள்ளதாக வெளியான தகவல் தவறானது என்று விளக்கம் அளித்தார்.

5 பாடங்கள் கொண்டு வருவது பற்றி முதலமைச்சரிடம் ஆலோசித்த பின்னர், மக்களிடம் கருத்து கேட்ட பிறகு தான் முடிவு செய்யப்படும் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை ஒரு மாதத்திற்குள் வெளியிடப்படும் என்று அவர் கூறினார். பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கவனத்திற்கு கொண்டு வரப்பட்டால் 24 மணி நேரத்திற்குள் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்.