12-ம் வகுப்பு பொது தேர்வு இன்று தொடங்கியது…


தமிழகத்தில் இன்று காலை முதல் பிளஸ் 2 தேர்வுகள் தொடங்கியது. இதனை தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். மேலும் தனித் தேர்வர்களாக 40,682 பேர் எழுதுகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள 103 கைதிகள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 2,756 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி, நண்பகல் 1.15 மணிக்கு நிறைவு பெறுகிறது.

பிளஸ் 2 தேர்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக அரசு தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்தார்.