முதல் ஒருநாள் போட்டி : ஆஸி.,அணியை வீழ்த்தி இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..

ஆஸித்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் 20 ஓவர் தொடரை

2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது.

இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் இன்று (சனிக்கிழமை) பகல்-இரவு மோதலாக அரங்கேறுகிறது.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி முதலில் பந்துவீச்சை தொடங்கியது.

இதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அதிகபட்சமாக கேதர் ஜாதவ் 81* தோனி 59* கோலி 44 ரன்கள் எடுத்தனர்.

ஐதராபாத்தில் நடந்த போட்டியில் வென்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.