2021 தேர்தல் வியூகம்: ஸ்டாலினுடன் இணைந்த பிரசாந்த் கிஷோர்

அரசியல் வியூகத்தில், தேர்தல் வேலையில் திறம்படச் செயல்படும் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனத்துடன் திமுக கை கோத்துள்ளது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இந்த ஒப்பந்தம் நடந்துள்ளது. இதை ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி என இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்ற ஆட்சி மாற்றங்களுக்குக் காரணமாக இருந்தவர் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர்.

 

தற்போது கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சிக்கும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கும் அரசியல் ஆலோசகராக இருந்து வருகிறார்.