21-வது காமன்வெல்த் போட்டி: இந்திய துப்பாக்கிச்சுடுதல் அணி அறிவிப்பு..


ஆஸ்திரேலியா வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள 21-வது காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்கும் 27 பேர் கொண்ட இந்திய துப்பாக்கிச்சுடுதல் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

21-வது காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லெண்ட் நகரில் ஏப்ரல் 4-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பங்கேற்கும் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 27 பேர் கொண்ட அணியில் ஜித்து ராய், ககன் நரங், அபூர்வி சாண்டிலா உட்பட பல முன்னணி வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆண்கள் அணி (15 வீரர்கள்): சஞ்ஜீவ் ராஜ்புட், செயின் சிங், ககன் நரங், ரவி குமார், தீபக் குமார், அனிஷ் பன்வாலா, நீரஜ் குமார், ஜித்து ராய், ஓம் பிரகாஷ் மித்தர்வால், மனவ்ஜித் சிங் சந்து, கைனன் செனாய், முகமது அசாப், அங்குர் மிட்டல், ஸ்மித் சிங், ஷீரஜ் ஷேக்.

மகளிர் அணி (12 வீராங்கனைகள்): அஞ்சும் மவுத்கில், தேஜஸ்வினி சாவந்த், அபூர்வி சண்டிலா, மெஹுலி கோஷ், ஹீனா சித்து, அன்னுராஜ் சிங், மனு பேக்கர், ஷ்ரேயாசி சிங், சீமா தோமர், வர்ஷா வர்மன், சானியா ஷேக், மகேஷ்வரி சவுகான்.