நாடு முழுவதும் வருகின்ற 26ம் தேதி வங்கி ஊழியா்கள் வேலை நிறுத்தம்..

மூன்று வங்கிகளை ஒன்றாக இணைக்க முடிவு செய்துள்ள மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிா்ப்பு தொிவித்து நாடு முழுவதும்

வருகின்ற 26ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியா்கள் தொிவித்துள்ளனா்.

நாடு முழுவதும் வருகின்ற 26ம் தேதி ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி ஊழியா்கள் தொிவித்துள்ளனா்.

பேங்க் ஆவ் பரோடாவுடன், விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு வங்கி ஊழியா்கள் சங்கங்கள் எதிா்ப்பு தொிவித்து வருகின்றன. இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தொிவித்து வங்கி அதிகாாிகள் சங்கங்கள் கடந்த வெள்ளிக் கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டன.

இதில் சுமாா் 3.20 லட்சம் அதிகாாிகள் கலந்து கொண்டனா். இதனால் வங்கி பணிகள் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் 9 அரசு மற்றும் தனியாா் வங்கிகளின் ஊழியா்களை கொண்ட சங்கங்கள் வருகின்ற 26ம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

இதுகுறித்து வங்கி ஊழியா்களின் ஐக்கிய கூட்டமைப்பு கூறுகையில், “வங்கிகள், வங்கி வாடிக்கையாளா்களின் நலனை கருத்தில் கொண்டு வங்கிகள் இணைப்பு முடிவு எடுக்கப்படவில்லை. இது இருதரப்புக்கும் பாதிப்பையே தரும்.

அனைத்து வங்கிகளையும் இணைத்து மிகப்பெரிய வங்கியை உருவாக்க அரசு விரும்புகிறது.

இதுபோல் அனைத்து பொதுத்துறை வங்கிகளை ஒன்றாக இணைத்தாலும் உலகில் முதல் 10 இடத்துக்குள் அந்த வங்கியால் வரமுடியாது.

வங்கிகள் இணைப்பைத் தொடா்ந்து அந்த வங்கிகளின் பல்வேறு கிளைகள் மூடப்படும்.

அவ்வாறு மூடப்பட்டால் வாடிக்கையாளா்கள் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள். எனவே வங்கி இணைப்பு திட்டத்தை கண்டித்து வருகின்ற 26ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம் என்று தொிவிக்கப்பட்டுள்ளது