5 ஆண்டுகளில் பிரதமர் மோடி அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை : அன்னா ஹசாரே குற்றச்சாட்டு..

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார்.

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறுகையில்,

லோக்பால் மற்றும் லோக்ஆயுக்தா சட்டம் 2013-ல் கொண்டு வரப்பட்டது. 2014-ல் பிரதமர் மோடி அரசு பதவிக்கு வந்ததும் மக்களுக்கு ஏதாவது செய்யும் என எதிர்பார்த்தோம்.

கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

மத்திய அரசை கண்டித்து ஜனவரி 30 முதல் ரலேகான் சித்திக்கில் மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளேன் என தெரிவித்துள்ளார்.