5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை : அமைச்சர் செங்கோட்டையன்…

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையம் அருகே துணைமின் நிலையம் கட்டுமான பணிக்கு அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டிய பின்னர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுமா என்பது குறித்த பொதுநலன் வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளதாக தெரிவித்த அமைச்சர்,

நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் இதுகுறித்து முதலமைச்சருடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.