5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு…

தமிழகத்தில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த மட்டுமே இந்த பொதுத்தேர்வு நடத்தப்படுவதாகவும், இது குறித்து மாணவர்களோ, பெற்றோர்களோ அச்சம் அடைய தேவையில்லை என்றும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

8ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 30ம் தேதி தொடங்கி ஏப்ரல் 17ம் தேதி முடிவடைகிறது. மாணவர்கள் வினாத்தாள் படிப்பதற்கு 10 நிமிடம், விவரங்களை பதிவு செய்ய 5 நிமிடங்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், காலை 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி, 12.15 மணி வரை நடைபெற உள்ளது.

இரு பொதுத்தேர்வுகளும் காலை 10.00 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.15 மணிக்கு முடிவடையும்.

அதில், மாணவர்கள் வினாத்தாள் படிப்பதற்கு 10 நிமிடம், விவரங்களை பதிவு செய்ய 5 நிமிடங்களும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், காலை 10.15 மணிக்கு தேர்வு தொடங்கி, 12.15 மணி வரை நடைபெற உள்ளது.

 

ஐந்தாம் வகுப்புக்கு தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களுக்கு மட்டுமே பொதுத் தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.