6.5 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் இது தேசிய பேரழிவு : ராகுல் குற்றச்சாட்டு..

2017-2018ஆம் ஆண்டில் வேலையில்லாதோர் விகிதம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.

தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அலுவலகத்தின் மதிப்பீட்டின்படி 2017 ஜூலை முதல் 2018 ஜூன் வரையுள்ள ஓராண்டில் வேலையில்லாதோர் விகிதம் 6 .1 சதவீதமாகி உள்ளது.

இது 1972-1973ஆம் ஆண்டுக்குப் பின் அதிக அளவாகக் கருதப்படுகிறது. நகர்ப்புறத்தில் வேலையில்லாதோர் விகிதம் ஏழு புள்ளி எட்டு விழுக்காடாகவும், ஊர்ப்புறத்தில் 5.3 சதவீதமாகவும் உள்ளது

இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் எனப்படும் அமைப்பு, கடந்த ஆண்டில் ஒரு கோடியே பத்து இலட்சம் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

ஒரு வருடத்திற்கு 2 கோடி வேலைகள் கிடைக்கும் என உறுதி அளிக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் வேலைவாய்ப்பு குறித்து வந்த அறிக்கை ஒரு தேசிய பேரழிவை வெளிப்படுத்துகிறது.

வேலையில்லாத் திண்டாட்டம் 45 ஆண்டுகளில் மிக உயர்ந்த நிலையில் உள்ளது. 2017- 2018 ஆம் ஆண்டில் 6.5 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என கூறி உள்ளார்.
NoMo Jobs!

The Fuhrer promised us 2 Cr jobs a year. 5 years later, his leaked job creation report card reveals a National Disaster.

Unemployment is at its highest in 45 yrs.

6.5 Cr youth are jobless in 2017-18 alone.

Time for NoMo2Go. #HowsTheJobspic.twitter.com/nbX4iYmsiZ

— Rahul Gandhi (@RahulGandhi) January 31, 2019