7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எதுவும் அனுப்பவில்லை: ஆளுநர் மாளிகை

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு  சிறையிலிருக்கும் 7 பேர் விடுதலை குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எதுவும் அனுப்பவில்லை என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக வந்த தகவலுக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.

7 பேரின் விடுதலை குறித்து சட்டப்படி முடிவு செய்யப்படும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.