8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..


சென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலைக்கு நிலம்கையகப்படுத்தல் தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் சுந்தர்ராஜன் வழக்கு தொடர்ந்தார். நிலத்திற்கு உரிமையாளர் இல்லாத ஒருவர் வழக்கை தொடர்ந்துள்ளது ஏற்புடையதல்ல என மத்திய, மாநில அரசுகள் வாதடினர். இதனையடுத்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஜூலை 12ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.