8 வழிச்சாலை அவசரமாக உருவாக்கப்பட்ட திட்டம்: டிடிவி.தினகரன்.


சேலம்-சென்னை 8 வழிச்சாலை அவசரமாக உருவாக்கப்பட்ட திட்டம் என்று டிடிவி.தினகரன் கூறியுள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

தமிழக அரசு கேட்ட மறுநாளே 8 வழிச்சாலைக்கு மத்திய அரசு அனுமதியளித்ததாக கூறியுள்ளார்.

8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகளை முதல்வர் சந்தித்து விளக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், காவல்துறை மூலம் விவசாயிகளை மிரட்டுவது சரியல்ல என அவர் கூறியுள்ளார்.