மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும்: முதல்வர் நாராயணசாமி


காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பிரதமருக்கு அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை பதில் கிடைக்காததால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரி அரசு சார்பில் ஓரிரு நாட்களில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என அவர் கூறியுள்ளார்.